கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-23 15:07 GMT
  • whatsapp icon

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குழவடையான் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள முன் பகுதியில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டி சுகாதார கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்