நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-09-23 14:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம். திருவேங்கைவாசல் பஞ்சாயத்து, செல்லுகுடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள், எழுத்து தேர்வுக்கு படிக்க வெகுதூரம் சென்று வர வேண்டியது உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்