பன்றிகள் தொல்லை

Update: 2022-09-23 13:52 GMT
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்காலனி, பள்ளிவாசல்தெரு, ராஜாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் காலைநேரங்களில் பன்றிகள் படைஎடுத்துவருகின்றன. தெருக்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பை-கூழங்களை பன்றிகள் கிளறிவிடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்