பெரம்பலூர் நகரப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் மற்றும் தெரு பகுதிகளில் ஏராளமான நாய், மாடு உள்பட பல்வேறு கால்நடைகள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று நாய்கள் கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.