வர்ணம் பூச வேண்டும்

Update: 2022-09-22 14:22 GMT

பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை வழியாக பவானி- மேட்டூர் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் சிங்கம்பேட்டை கேட் என்னும் இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடை மீது பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வர்ணம் பூசப்படவில்லை. மேலும் வேகத்தடை இருப்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் அந்த பகுதி வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே வேகத்தடையில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்