நாய்கள் தொல்லையால் மாணவிகள் அச்சம்

Update: 2022-07-14 10:22 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே நாய்கள் அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் பள்ளிக்கு வர மாணவிகள் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்கிறது. எனவே பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்