சேதமடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம்

Update: 2022-09-22 14:01 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்தநிலையில் சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு பலமுறை புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் 6 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்