பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மீண்டும் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நகர்ப்பகுதியில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.