அரசு பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

Update: 2022-09-21 14:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜாளிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தொடர்ந்து படிக்க 11 மற்றும் 12-ம் வகுப்புகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு மணப்பாறை சென்று வர வேண்டி உள்ளது. எனவே அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தர உயர்த்தி 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்