தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-21 14:49 GMT
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் முதன்மை சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் முதன்மை சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மேற்கண்ட 3 பள்ளிகள் செயல்படும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்