பொது கழிவறை கட்டப்படுமா?

Update: 2022-09-21 14:48 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 மேற்க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தினமும் செந்துறை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் செந்துறை பஸ் நிலையத்தில் எந்த இடத்திலும் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே செந்துறை பஸ் நிலையத்தில் பொது கழிவறை கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்