அரியலூர் மாவட்டம் கீழ கொளத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து திண்டபங்கள், காய்கறிகளை ஆகியவற்றை எடுத்து சென்று வருகிறது. மேலும் சாலைகளில் நடந்து செல்வோரை கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.