தடை செய்யப்பட்ட நேரத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2022-09-20 13:47 GMT

அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு பள்ளி வேன் மீது டிப்பர் லாரி மோதியதால் அகோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் வி.கைக்காட்டிலிருந்து புத்தூர் கிராமத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு தடை செய்யப்பட்ட காலை நேரத்தில் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதோடு அல்லாமல் வி.கைகாட்டி பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் இயங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமும், போதிய பாதுகாப்பு இல்லை . எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வி.கைகாட்டியில் தடை செய்யப்பட்ட நேரங்களில் இயங்கும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்