அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வாணதிரையன் பட்டணம் கிராமத்தில் நூலகமாக செயல்பட்டு வந்த கட்டிடம் தற்பொழுது புது வாழ்வு திட்டத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.