சுற்றுசுவர் தேவை

Update: 2022-09-20 10:00 GMT
உளுந்தூர்பேட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு சுற்றுசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் தொழிற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்து மது குடித்து வருகின்றனர். மேலும் காலிபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு சுற்றுசுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்