அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்காக அந்த பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே பாலம் கட்டும் பணி முடியும் வரை மாற்றுப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.