பரங்கிப்பேட்டை பஸ் நிலைய வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்று தனி அறை அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்றி அந்த அறையின் கதவுகள் சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தாய்மார்களின் பாலூட்டும் அறையை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.