புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள குள்ளான் கண்மாயின் நீர் நிலை பகுதியை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற நிலத்திற்கு செல்லும் வழி நடை ஆக்கிரமிக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.