அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைவீதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை கடையில் உள்ள பொருட்களை எடுத்துச்செல்வதோடு, குடியிருப்பில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.