ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-09-18 13:23 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் குளித்தலை பஸ் நிலையம் முதல் பெரிய பாலம் வரையில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதுதவிர மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளாமல் உள்ளது. எனவே முறையாக அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்