கரூர் மாவட்டம், தேவர்மலை கிராமம் குருணி குளத்துப்பட்டி வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழி இன்றி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.