அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் காய்கறி மார்க்கெட் பின்புறம் உள்ள கோடப்பிள்ளை குட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த குட்டையில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு குட்டையை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.