ஓசூரில் தளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. பொழுதுபோக்கிற்காக, இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பூங்காவின் உள்ளே சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் இங்கு வந்து செல்ல அச்சம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.