புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-18 07:07 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பேரூராட்சி தலைவன்வடலி கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக வாசகர் நாராயண பெருமாள் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மின்கம்பம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்