கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியில் உபரி நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கால்வாய் முழுவதும் ஆள் உயரத்திற்கு மேல் சம்புகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் வழியாக நீர் செல்ல முடியாமல் உள்ளது. மழை காலங்களில் மழைநீரும் செல்ல முடியாமல் தேங்கி ஊருக்குள் புகுந்து வீடுகளுக்குள் மழைநீர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்துப்பாளையம் பகுதியில் உபரிநீர் கால்வாயில் முளைத்துள்ள சம்பு மற்றும் பல்வேறு செடி, கொடிகளை அகற்றி மழை நீர் ஊருக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.