ஆபத்தான நிலையில் உள்ள மின் மோட்டார் அறை

Update: 2022-09-17 15:06 GMT

கரூர் மாவட்டம், புங்கோடை குளத்துப்பாளையத்திலிருந்து வேட்டமங்கலம் செல்லும் தார் சாலை ஓரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகில் மின் மோட்டார் அறை கட்டப்பட்டு அதனுள் சுவிட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்மோட்டார் அறை கட்டுப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அறை பழுதடைந்து துவாரம் ஏற்பட்டு எந்த நேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்