போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-17 14:28 GMT

திருநாவலூர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் திருநாவலூர் போலீசாரால் சரியான முறையில் ரோந்து பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க களமருதூரில் புதிதாக போலீஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதுவரை போலீஸ் நிலையம் அங்கு அமைக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி களமருதூரில் புதிதாக போலீஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்