பெரம்பலூர் புறநகர்பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமான ஒன்று சேர்ந்து சுற்றித்திரியும் நாய்கள் தெருவில் செல்வோர்களை தூரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி தின்று விடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறோம்.