மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் இருபுறமும் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடரங்கம்