கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரில் இருந்து கவுண்டன்புதூர் செல்வதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.