பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரவு நேரங்களில் சிலர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அவர்கள் காலிபாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.