அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் இயற்கை உபாதைக்கு ஒதுங்கவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ போதிய கழிவறை வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.