நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடியில் பழமை வாய்ந்த பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை தேவன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிக்க மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடைக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தர வேண்டும்.
பொதுமக்கள் தேவன்குடி...