கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனியில் இருந்து நெய்தலூருக்கு செல்லும் தார் சாலையில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வாகன ஓட்டிகள் செல்லும் போது குறுக்கே சென்று வருகின்றது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி வந்து கடிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.