பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையினுள் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறுகின்றனர். எனவே பாழடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு, புதிய நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.