கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-16 15:28 GMT

சிவகங்கை மாவட்ட பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களே விவசாயிகளின் அடிப்படை நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது சில கண்மாய்கள் கருவேல மரங்களால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் கண்மாயில் நீர்வளம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்