பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. ஆனால் அந்த சமுதாய நலக்கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பொதுமக்களால் வரமுடிவதில்லை. மேலும் அந்த வழியாகவும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் சமுதாய நலக்கூடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.