ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள், பொருட்களை திருடும் சம்பவங்கள், வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சம்பவங்களால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க மாணிக்கம்பாளையம் வீட்டுவசதிய வாரிய குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.