தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-16 13:08 GMT

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தது. சில நேரங்களில் விளம்பரப்பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது என்றும், சாலை ஓரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று வருவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சுவரொட்டிகளை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்