ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள கட்டிடமானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.