பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளகாநத்தம், கொளத்தூர் , பாடாலூர் ஆலத்தூர் கேட் ஆகிய 4 இடங்களில் தினமும் காலை முதல் இரவு வரை 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் வாலிபர்கள் பலர் காலை நேரங்களில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.