பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு அவசியம்

Update: 2022-09-15 10:52 GMT
திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஏனாதிமங்கலம் செல்லும் சாலை கள்ளுக்கடை மூலையில் உள்ளது. இந்தப் பள்ளி நுழைவாயில் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் மாணவிகளை பின்தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்கள். இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே மாணவிகள் அச்சமின்றி பள்ளி சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்