தீருமா நாய்கள் தொல்லை

Update: 2022-09-15 10:29 GMT

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் தனியாக செல்லும் சிறுவர்களையும், குழந்தைகளையும் நாய்கள் துரத்திச்சென்று கடித்து குதறும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறதா என்று தெரியவில்லை. உடுமலை கணக்கம்பாளையம் காந்திபுரம் (அமுதராணி பஸ் நிறுத்தம்) அருகே நாய்கள் அதிகமாக உள்ளது.அந்த வழியாக இரவில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சாலையில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து விரைவில் அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


மேலும் செய்திகள்