பழுதடைந்த மின் விளக்குகள்

Update: 2022-09-15 10:26 GMT

புராதன நகரங்களில் தாராபுரம் ஒன்று. இங்கு அமரலோக நதி என்று போற்றப்படும் வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் சிறப்பு மிக்க அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்த திருத்தலத்திற்கு செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பழுதடைந்து விட்டது. மேலும் மிகவும் பழமையான மின் விளக்குகள் அவை.அது மட்டுமல்ல மின்வயர்கள் தரையில் பாதுகாப்பு இல்லாமல் கிடக்கிறது. இந்த கோவிலுக்கு விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். மேலும் தினமும் காலையில் அமராவதி ஆற்றில் குளிக்க இந்த வழியாகத்தான் பொதுமக்கள் செல்வார்கள். எனவே பக்தர்கள் மற்றும் ெபாதுமக்கள் நலன் கருதி மின் வயர்களை மாற்றி, புதிய மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.


மேலும் செய்திகள்