அறிவிப்பு பலகையை மறைத்த மரக்கிளைகள்

Update: 2022-07-13 11:38 GMT

பாளையங்கோட்டை சமாதானபுரம்-திருச்செந்தூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பலகையை அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் மறைத்து உள்ளது. இதனால் திருச்செந்தூர், தூத்துக்குடியில் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் நெல்லைக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே அறிவிப்பு பலகையை மறைத்த மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

தமிழரசு, சமாதானபுரம்.

மேலும் செய்திகள்

மயான வசதி