மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி ஊராட்சிக்குட்பட்ட அழகர்நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தெருவில் விளையாடும் குழந்தைகளை கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?