பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

Update: 2022-09-14 12:30 GMT
திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திக்குப்பத்தில் துணை சுகதாரநிலையம் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடமானது புதுப்பொலிவுடன் இருக்கிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சுகாதார நிலையம் செயல்படாமல் இருப்பதுதான் வேதனையானது. அந்த பகுதி மக்கள் அவசர தேவைக்கு நகர பகுதியை சாா்ந்து இருக்க வேண்டியுள்ளது. பூட்டி கிடக்கும் இந்த சுகாதார நிலையம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட இந்த துணை சுகாதார நிலையத்தை அவா்கள் பயன்படுத்து வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்