சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் பருவ மழை தொடங்கும் முன்பாக கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்களை சீரமைத்தால் மழைநீரை சேகரிக்க முடியும். எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.