அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவின் மையப் பகுதியாக விளங்குகிறது குழுமூர். இந்த கிராமத்தைச் சுற்றி 25 கிராம விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஆகையால் இங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.