பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரே கல்லாற்றின் குறுக்கே பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் குறுகலான பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் 2 வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மேம்பாலம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.